Thursday, October 11, 2007

உனக்கொரு கேள்வி













உன்
சிரிப்பொலி சத்தம் கேட்டு
இவ்வாண்டின்
சிறந்த இசையமைப்பாளராக
உனைத் தேர்வு செய்துள்ளது
தமிழ்நாடு அரசு

என் இதயத்தைக்
கிழித்துப் போட்டுத்
தலைமறைவான
கொலைக்காரி
உன்
கூந்தல் வாசம் நுகர்ந்து
மூன்றே நிமிடத்தில்
உன் பட்டுக் குஞ்சம்
கவ்வி நின்றது
போலீஸ் மோப்ப நாய்

அயர்க்கும்
அக்னி வெயிலில்
அசைந்தாடி நடந்துவரும்
உன்
நிழலின் குழுமையில்
குளிரால் நடுங்கி நிற்கிறது
குளுகுளு வேம்பு

ஏண்டி
தெரியாமல் தான் கேட்கிறேன்...
பிரம்மன் என்ன உன்
பினாமியா?

2 comments:

Anonymous said...

நல்ல கேள்வி!

பார்த்து..கலைமகள் உங்கள் கவிதையை வாசித்துவிட்டு பிரம்மனிடம் கோபப்படப்
போகிறார்..நவராத்திரியும் அதுவுமா...

அன்புடன்
சுவாதி

Anonymous said...

ஜான் அவர்களை வீழ்த்த வந்த சுனாமி!
--
வேந்தன் அரசு