உறவு
உனை அழவைக்கும் உறவு
உன் உறவுக்குத் தகுதியற்றது
உன் அழுகைக்கு தகுதியான உறவு
உனை ஒருபோதும் அழ விடாது
உறவை நினைத்து அழாதே...
என் இதயத்துக்குள் புதைந்து கிடக்கும் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால அனுபவங்களையும் கவிதை, கட்டுரை, ஒலி, ஒளி வடிவில் நான் இறைத்துப் போட்டிருக்கும் வேலியில்லா களத்து மேடு. Disclaimer: நான் கவியரசோ, கவிப்பேரரசோ அல்ல; கவிதைச் சோதனையில் களமிறங்கியிருக்கும் 'கத்துக்குட்டி'. கற்றுவிட்டு கவிதை எழுத வரவில்லை; மாறாக, கவிதை எழுதிக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்... கவனம் தேவை!
உனை அழவைக்கும் உறவு
உன் உறவுக்குத் தகுதியற்றது
உன் அழுகைக்கு தகுதியான உறவு
உனை ஒருபோதும் அழ விடாது
உறவை நினைத்து அழாதே...
Posted by
John Peter Benedict
at
12:21 PM
3
comments
Labels: கவிதை
இரவிலும் பகலிலும் இதயத்தில்
இடைவிடாத இரைச்சல்
தாய்நாட்டு ஞாபகம்
-----
இருக்கிற பிசாசுல
இந்தப் பிசாசுதான்
நல்ல பிசாசு
தேர்தலில் வென்றவர்
-----
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
விபச்சாரம்
-----
விஞ்ஞான வளர்ச்சியில்
அதிக விளைச்சலுக்காய்
ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும்
இள வாழைக் கன்றுகள்
இங்கிலீஷ் மீடியம் குழந்தைகள்
-----
Posted by
John Peter Benedict
at
10:57 AM
2
comments
இடுப்பு வலி யெடுத்த
எங்க ஊரு பொம்பளையளுக்கு
எத்தனையோ பிரசவங்களை
இலவசமா பார்த்த பாட்டி
பாட்டின்னா பாட்டி
அப்படியொரு பாட்டி
உயிரோடு புள்ளையளை
உருவி எறியும் 'மொட்டையம்பட்டி' பாட்டி
காது கொஞ்சம் கேட்காத பாட்டி
காசு பணம் வாங்காத பாட்டி
கஞ்சி கொஞ்சம் ஊத்துனா
காலை நீட்டி குடிச்ச பாட்டி
காரியக்காரர் பொஞ்சாதிக்கு
கவனமா பிரசவம் பார்த்து
கருப்பு நிற குழந்தை என்னை
கண்டாங்கியில் கிடத்திய பாட்டி
வயிற்றுப் பசிபோக்க என் இல்லம் நீ
வந்தபோதெல்லாம் உனைக் கொடிய
வார்த்தைகளால் தூற்றிய என் இளம்
வயதை நினைத்து வருந்துகிறேன் பாட்டி
அறியாமல் நான் செய்த
அக்கிரமம் பொறுத்துக்கோ பாட்டி
அடுத்த தலைமுறைக்கு முதியோரின்
அருமைதனை எடுத்துரைப்பேன் பாட்டி
காலில் விழுந்து மன்னிப்புகேட்க
காலம் உனை விட்டு வைக்கலையே பாட்டி
காலப் பேராழியில் இந்தக்
கவிதை உனக்கு அர்ப்பணம் பாட்டி
குறிப்பு: சமீபத்தில் எனக்கொரு மகள் பிறந்தாள்
Posted by
John Peter Benedict
at
4:50 PM
0
comments
நிலாச்சாரல் மின்னிதழில் பிரசுரமான இக்கவிதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
Posted by
John Peter Benedict
at
3:53 PM
0
comments
Labels: கவிதை
ஆணுக்குப் பெண்ணை
அடிமையாக்குதல் பாவம்;
பேனாக்கள் போர் முழக்கமிட
பெருமையாய் எழுதுகின்றன
ஆண் கவியும் பெண் கவியும்
ஆதரிப்பார் யாருமின்றி
அலைந்து கொண்டிருக்கின்றன
ஆண் பிணங்கள் சில...
சமபங்கும் வேண்டாம்
சமத்துவமும் வேண்டாம்...
எங்களையும் வாழவிடு
என்ற எளிய கோரிக்கையோடு!
Posted by
John Peter Benedict
at
9:49 PM
2
comments
Labels: கவிதை