Monday, March 3, 2014

தேம்பாவணி - சிற்றுரை

வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான  தேம்பாவணிபற்றி  நான் ஆற்றிய சிற்றுரை.

நன்றி.

Friday, August 16, 2013

புறநானூறு மாநாட்டில் "முத்தமிழ் முழக்கம்" மற்றும் "சிவகாமியின் சபதம்"

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக,  ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1, 2013 தேதிகளில் நிகழவிருக்கும் பன்னாட்டு புறநானூறு மாநாட்டுக்கான பணிகள் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிகழ்த்திக் காட்டப்பட்ட  "முத்தமிழ் முழக்கம்" என்ற புறநானூறு சார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியும், "சிவகாமியின் சபதம்" வரலாற்று நாடகமும்  நடைபெறவிருக்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சங்க இலக்கியத் தேன்  துளியைப் பருகிச் செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, Click Here for the Flier


As part of this historic conference, we are bringing out a conference souvenir (விழா மலர்) which will have prize winning essays, articles by scholars, etc. To make it memorable, we decided to have some advertisements and greetings from individuals and organizations. We humbly request you to have your greetings or advertisement placed in the souvenir.
Please email us your filer, if it is a business OR name and family members name, city and state, family photo, and greetings phrase. Email them to jpbenedict@hotmail.com 
You can donate online at http://www.classicaltamil.org/registration.html#

Friday, July 26, 2013

வாசிங்டனில் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு

தமிழனின் பண்பாட்டுப் பெட்டகமாகிய புறநானூற்றுக்கு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் , வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து பன்னாட்டு புறநானூறு மாநாடு - International Conference on PuRaNaanooRu (ICP) ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநானூற்றுக் கருத்துக்களை வட அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்களிடமும், இளைஞர்களிடமும், மற்றவர்களிடமும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, பல்வேறு போட்டிகளும், புறநானூறு சார்ந்த நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன. புறநானூற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் தமிழறிஞர்கள் பலர் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். புறநானூற்றைப் பற்றியும் தமிழரின் சங்ககால வாழ்வியலைப் பற்றியும் அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு! ”வருக, வருக” என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!


Saturday August 31, 2013 from 1:00 PM to 9:00PM
Sunday September 1, 2013 from 9:00 AM to 8:00 PM

இடம்: Montgomery College Cultural Arts center – Theater 1
7995 Georgia Ave, Silver Spring, MD 20910

Web: http://www.classicaltamil.org/#
சங்கத் தமிழின் பெயரால் சங்கமிப்போம்! சாதனைகள் பல நிகழ்த்துவோம்!

அன்புடன்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் & வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

Sunday, June 12, 2011

திருக்குறள் ஒப்புவித்தல்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றாள் எனது ஏழுவயது மகள் ஷர்லி.


Tuesday, June 23, 2009

உறவு

உனை அழவைக்கும் உறவு
உன் உறவுக்குத் தகுதியற்றது
உன் அழுகைக்கு தகுதியான உறவு
உனை ஒருபோதும் அழ விடாது
உறவை நினைத்து அழாதே...